அதிமுக கவுன்சிலர் மரணம்: நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இபிஎஸ்!

author img

By

Published : Dec 1, 2022, 4:04 PM IST

உயிரிழந்த அதிமுக கவுன்சிலர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி

ஈரோடு மாவட்ட அதிமுக கவுன்சிலர் சண்முகவேல் மறைவை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு நேரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள அத்தாணி, கருவல்வாடிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (64). ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு மூன்றாவது வார்டு கவுன்சிலராகவும், ஈரோடு மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலையின் துணைத் தலைவராகவும் இருந்தார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை மாரடைப்புக்கு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, சண்முகவேல் இல்லத்திற்கு நேரில் சென்று சண்முகவேலில் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆளுதல் தெரிவித்தார்.

உயிரிழந்த அதிமுக கவுன்சிலர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் எல்.முருகன் ரகசிய யாகம்: பழனியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.